சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காட்டாம்பூர் கிராமத்தில் பாரம்பரியமான பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவராத்திரியின் மூன்றாம் நாளில் காடு, வயல் கடந்து சென்று பறவைகளை வேட்டையாடி வந்து சமைத்து விருந்து படைப்பதை பாரி வேட்டை என்கின்றனர்.
பறவை வேட்டைக்கு அரசு தடை விதித்த நிலையில், பாரம்பரியம் தடைபடக்கூடாது என்பதற்காக ஆயுதங்களைத் தவிர்த்து, வெறும் கொம்புகளோடு வேட்டைக்குச் சென்று திரும்பினர்.